மீண்டும் வங்குரோத்து?
இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எதிர்கால மாதாந்த முன்னறிவிப்புகளை வெளியிடுவது கடினமாக உள்ளதாகவும், நிலைமைகள் மிக வேகமாக மாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவைக் காட்டிலும் இலங்கைக்கு அச்சுறுத்தல் அதிகம் .700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவிலேயே, பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உலகளாவிய நெருக்கடி தொடர்ந்தால், குறைந்த கையிருப்புள்ள இலங்கை போன்ற நாடுகள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும்.
இந்தியா ஏற்கனவே தனது அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய) ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இலங்கையிலும் அத்தியாவசியமற்ற எரிபொருள் பாவனையைக் குறைப்பது கட்டாயமாகும் . இந்தியாவைப் போன்று இலங்கையிலும் அரச ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து நிதி அமைச்சு அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

Post a Comment