யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தூபியில் இடம்பெற்றது.

இதன் பொழுது பொதுசுடர் ஏற்றப்பட்டு, தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது 

நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள், பல்கலை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







No comments