புளொட் அலுவலகத்தில் துப்பாக்கிகள்?



வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில்  இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது.

இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் 1985 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் முகாம் ஒன்று இயங்கியதுடன், அதற்கு அண்மித்த பகுதியில் யுத்த காலத்தில் புளொட் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments