யாழில் வெட்கம் மானப்பிரச்சினையாம்?



தேர்தல் காலத்தில் எங்களை எதிர்த்தவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டுத் துடிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே பலர் புதிய அணிகளை உருவாக்கியும் தேசிய மக்கள் சக்தியை மேவி வரமுடியவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி மட்டுமே தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்தது. ஆகவே மக்களின் ஆணையைப் பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கு உரித்துடையவர்கள். குறுக்கே எவரும் வரவேண்டாம் என்ற எச்சரிக்கையை ஏனைய கட்சிகளுக்கு விடுக்கின்றேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டவர்களிற்கான சத்திய பிரமாண நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உரையாற்றுகையில் கண்டவர்களையும் தங்களுடன் சேர்த்து அணியாக தம்மை காட்டி கொள்பவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது" என்றும் சொல்லி இருக்கிறார்.

No comments