அருச்சுனாவிற்கு பதில் கௌசல்யா!
வைத்தியராக சேவையிலிருந்த நிலையில் அனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்ட இராமநாதன் அருச்சுனா பதவி பறிப்பப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகும் போது, தனக்கு பதிலாக சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போதே அவர் தகவல் வெளியிடுகையில் நிலையியல் கட்டளையின் படி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வரும் விருந்தினர்களை வைத்திருக்க வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன்னுடன் வருகை தந்த சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனை கேவலமான முறையில் அவமதித்துச் சென்றிருக்கின்றார்.
அடுத்த மூன்று மாதங்களின் பின்னர் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்போது, எனக்கு அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக கௌசல்யா அந்த பதவிக்கு வரப் போகின்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்டபலத்தை விட அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் சட்டத்தரணி கௌசல்யா.
அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவமதித்திருப்பதாக இராமநாதன் அருச்சுனா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

Post a Comment