ஊடகங்களது திருட்டு மெளனம் ஏன்?

 


பல ஊடகவியலாளர்களை பணியாளர்களாகக் கொண்டிருக்கின்ற சக்தி, தெரன, அரச ஊடகங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகத்திலும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விடயம் அறிக்கையிடப்படவில்லை. அதாவது ஒட்டுமொத்த தெற்கும், இவ் விடயத்தினை திட்டமிட்டு தணிக்கை செய்து வருகின்றது. இதற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் விதிவிலக்கில்லையென கருத்து பகிர்ந்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.

பேருந்து நிலையம் சுத்தம் செய்ய ஊடகவியலாளர்கள் புடைசூழ சென்ற இளங்குமரனுக்கு அகழ்வுப் பணியினை நேரில் சென்று பார்வையிடவோ, பாராளுமன்றத்தில் அதுபற்றி உரையாற்றவோ இன்னும் நேரம் கூடி வரவில்லை. 

எம் மக்கள் கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த எனக் கருதப்படுகின்ற புதைகுழி தொடர்பில் தெற்கு ஊடகங்கள் மௌனம் சாதிப்பது தொடர்பில் குரல் எழுப்ப வேண்டியது அவசியம். இருப்பினும், அஸாமினை மட்டும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது என்பது சரியானதாகத் தெரியவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இயங்குகின்ற அரச ஊடகங்களுடன் ஆரம்பிக்க வேண்டுமென கருத்து பகிர்ந்துள்ளார் .

No comments