யாழில் 45: இலங்கை முழுவதும் 5214!
நாளை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், 267 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5214ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே யாழ். மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அனைத்து முறைப்பாடுகளும் வன்செயல்கள் அல்லது வன்முறைகள் சட்ட மீறல்களாகவே காணப்படுகிறதெனவும் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜூலை 31 முதல் செப்டம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 5214 முறைப்பாடுகள் இலங்கை முழுவதும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்த புகார்களில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 1657, தேர்தல் புகார் மேலாண்மைக்கான மாவட்ட அலுவலகங்களிற்கு 3557 புகார்கள் வந்துள்ளன.
அனைத்து புகார்களும் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment