குடும்பம் குடும்பமாக தப்பியோட்டம்!



ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக இலங்கையின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும், உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் இன்றியும் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராஜபக்ச குடும்பத்தினை சேர்ந்த பஸில் ராஜபக்ச,மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிள்ளைகள் மாமியார் என பலரும் நாட்டைவிட்டு தப்பித்து வருகின்றனர்.

இதனிடையே நாளை தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் பொதுஜன பெரமுன   நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை   பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் தேசிய அழைப்பாளர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானத்திற்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் மற்றுமொரு வேட்பாளரை ஆதரித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அபேகுணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பொதுஜன பெரமுனவில் இருந்து பவித்ரா வன்னியராச்சி,  எஸ்.எம். சந்திரசேன ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.


No comments