ரணிலின் மற்றொரு ஆசையும் தகர்ந்தது!
ஈஸ்டர் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தியதற்காக ராஜபக்சக்களை திருப்திப்படுத்த ரணில் முன்னெடுத்த மற்றொரு கைதும் தோற்றுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோரை கைது செய்ய தீர்மானம் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று (20) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு குறித்து தம்மைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment