நாமல்:வடை போச்சே!
சித்தப்பாக்கள் நாட்டைவிட்டு தப்பித்து செல்வதால் நாமல் தொடர்ந்து வாக்குகளை இழந்துவருகின்றார்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்க்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில் இன்று (20) அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK 659 இல் அவர் துபாய்க்கு புறப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான சேவையின் கோல்ட் ரூட் விசேட நுழைவாயில் ஊடாக முன்னாள் அமைச்சர் பிரவேசித்து பயணித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இதனால் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவரின் வாக்குகளையும் நாமல் ராஜபக்க்ஷ இழந்துள்ளார்.
Post a Comment