அனுரகுமார யாழ்ப்பாணத்திற்கு!



ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளிற்கான முன்னாயத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சிகளிற்காக அனுரகுமார திசாநாயக்க வருகை தரவுள்ளார்.

ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு ஆகிய இரு நிகழ்வுகளில் பங்கேற்கவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வருகை தரவுள்ளார்;.

மாநாடுகள் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில்  இடம்பெறவுள்ளது.

அதன் முதல் நிகழ்வாக ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு பிற்பகல் விடுதி ஒன்றின் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இழக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை வென்றெடுப்போம்! ஆசிரியர் - மாணவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது எப்படி?” எனும் கருப்பொருளில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாநாட்டில் அச்சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க மற்றும் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்

அதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments