வவுனியா விபத்து: ஒருவர் பலி! மற்றவர் காயம்!!


வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில்  ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த காவல்துறை உத்தியோகத்தர் உந்துறுளியில் பயணித்துள்ளார்.

இதன்போது எதிரே மற்றொரு உந்துறுளி பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன், முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 வயதான அக்கராயன் பகுதியில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் திசாநாயக்கா என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


No comments