மனைவி கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு


குடும்ப தகராறில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

திஸ்ஸமஹரகம பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது , மனைவி துப்பாட்ட மட்டையால் (Bat) தாக்கியதில் கணவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , உயிரிழந்தவரின் மனைவியை கைது செய்துள்ளனர். 

No comments