சுவஸ்திகா அருள்லிங்கத்திற்கு அனுமதியில்லை!



தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள கொழும்பு மைய சட்டத்தரணியொருவருக்கு யாழ்.பல்கலையினுள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என விமர்சித்த  சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து கருத்தரங்கு நிறுத்தப்பட்டுள்ளது. 

அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.

அவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தநிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா பங்கு பற்றும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நிலையில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டு நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவுதூபியை இடித்தகற்ற சில தரப்புக்கள் சதியில் ஈடுபட்டுள்ளமை மாணவ சமூகத்திடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. 


No comments