இத்தாலியில் கனமழை: வெள்ளப்பெருக்கில் 9 பேர் பலி!


இத்தாலியின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

பாலம் இடிந்து விழுந்த பகுதியின் அருகில் வசிப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர். தற்போது பெய்து வரும் மழையினால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

37 நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் பாதித்துள்ளதாகவும், சுமார் 120 நிலச்சரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments