யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தூபியில் இடம்பெற்றது.

இதன் பொழுது பொதுசுடரினை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட  பீடாதிபதி  பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது 

அதன் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள், பல்கலை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






No comments