கூட்டாகவே பயணம்:சுமா!



 தமிழரசுக்கட்சியினில் யார் தலைவராகினாலும் நானும் சிவஞானம் சிறீதரனும் ஒன்றாகவே இணைந்து பயணிப்போம் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

நாங்கள் இருவரும் யார் தலைவராகினாலும் ஒன்றாகவே பயணிப்போம் .தமிழ் மக்கள் கூட்டணியையும் எங்களுடன் வந்து சேருமாறு கேடடுள்ளோம்.

தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியின்  தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழரசுக்கட்சியுடன் இணையவுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஊடக செவ்வியொன்றில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழரசுக்கட்சியின் தலைமை பதவிக்கு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நானும் சிவஞானம் சிறீதரனும் ஒன்றாகவே இணைந்து பயணிப்போம் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்


No comments