ரணிலுடன் டெலோவும்கோபமாம்!



 தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டமைப்பாக இயங்குவதற்கு யாப்பு உருவாக்கப்பட்டு அடுத்த கூட்டங்களில் இறுதி செய்யப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழுக்கூட்டம் சிறீசபாரத்தினம் நினைவேந்தலிற்கு வந்த டெலோ அமைப்பினரும் யாழிலுள்ள ஏனைய கட்சிகாரர்களும் பங்கெடுக்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதனிடையே எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் ஜனாதிபதியோடு இடம்பெறும் வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். அவ்வாறு அழைக்காவிட்டால் குறித்த கூட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னணி இத்தகைய சந்திப்பினை தாம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments