ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்த டிரம்ப், அமெரிக்க கடற்படை முற்றுகை இனி நீக்கப்படும் என்றும் கூறினார்
வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் ரூமில் நடந்த சந்திப்பின்போது, ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
தங்களிடம் அணு ஆயுதமோ அல்லது அணுகுண்டோ இருக்காது என்பதை ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறினார். ஹோர்முஸ் ஜலசந்தி, இரு திசைகளிலும் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்காக, சுங்கக் கட்டணங்கள் இன்றி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். ஏதேனும் நீர் கண்ணிவெடிகள் இருந்தால், அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்படும் (எங்களுடைய மாபெரும் நீருக்கடியில் இயங்கும் கண்ணிவெடி அகற்றும் கப்பல்களைக் கொண்டு, இதுபோன்ற ஏராளமான கண்ணிவெடிகளை நாங்கள் வெடிக்கச் செய்து அகற்றியுள்ளோம். எஞ்சியிருக்கும் கண்ணிவெடிகளை ஈரான் உடனடியாக அகற்றும் அல்லது வெடிக்கச் செய்யும். அவை அதிக எண்ணிக்கையில் இருக்காது.
தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள, நமது வியக்கத்தக்க மற்றும் முன்னெப்போதும் இல்லாத கடற்படை முற்றுகையின் காரணமாக ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்கள், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பும் செயல்முறையைத் தொடங்கலாம்.
11 மாதங்களுக்கு முன்பு நமது சக்திவாய்ந்த பி2 குண்டுவீச்சு விமானத் தாக்குதலால் கிட்டத்தட்ட சரிந்துபோன மலைகளின் மீது படிந்து, பூமிக்கு அடியில் ஆழமாகப் புதைந்துள்ள, சில சமயங்களில் 'அணுத்தூள்' எனக் குறிப்பிடப்படும் செறிவூட்டப்பட்ட பொருளை, அமெரிக்கா (சீனாவுடன் சேர்ந்து, அவ்வாறு செய்வதற்கான இயந்திரத் திறனைக் கொண்ட ஒரே நாடு இதுதான் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது), ஈரான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முயற்சியுடன் தோண்டி எடுத்து அழிக்கும். மறு அறிவிப்பு வரும் வரை எந்தப் பணப் பரிமாற்றமும் நடைபெறாது," என்று டிரம்ப் கூறினார்.
ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தற்போது சிச்சுவேஷன் ரூமில் இருப்பதாக டிரம்ப் கூறினார்.
டிரம்பின் சமீபத்திய கருத்துக்கள் உண்மையும் பொய்யும் கலந்தவை என்று நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அணுப் பொருட்களை அழிப்பதற்கு எந்த விதியும் இடம்பெறவில்லை என அந்த அமைப்பு தெரிவித்தது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படுகிறது, மேலும் அணுசக்தி விவகாரம் குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
உத்தரவாதங்கள் அல்லது வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, செயல்கள் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது" என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் வெள்ளிக்கிழமை முன்னதாகக் கூறினார்.

Post a Comment