வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரருக்கு நெருக்கடி!



வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை ஆக்கிரமித்து விகாரையினை அமைப்பதற்கான நெருக்கடிகள் உச்சமடைந்துள்ளது.ஆதிலிங்கஸ்வரர் இருப்பின் காலம் சுருங்கிவருகிறது. எனவே ஆலயத்திற்குப் போக விரும்பியவர்கள், நேர்த்தி ஏதும் வைத்தவர்கள் விரைவாக சென்றுவாருங்கள் என எல்லைக்கிராமத்திலிருந்து அபயக்குரல்கள் எழுந்துள்ளன.

இன்றைய தினம் சரத்வீரசேகர வெடுக்குநாறிமலை வந்து திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மீள சிவலிங்கம் நிறுவப்பட்டமைக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் பௌத்த அமைப்புக்களால் முறையிடப்பட்டுள்ளது. 

இதனிடையே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ்ச் சைவப் பேரவையின் ஏற்பாட்டில்  இன்று சனிக்கிழமை பொங்கல் பூசை.வழிபாடுகள் நடந்துள்ளது.




No comments