சீன கப்பலில் தொடரும் தேடுதல்!

 


இலங்கையின் தெற்கே இந்தியாவை அண்மித்து சந்தேகத்திற்கிடமாக மூழ்கடிக்கப்பட்ட சீன கப்பலில் இருந்து உயிரிழந்தவர்களது உடலங்களை அகற்ற இலங்கை கடற்படை பாடுபட்டுவருகின்றது.

ஆழ்கடலில் கடந்த 16ஆம் திகதி கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பலில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படையினரின் கப்பலான விஜயபாகு செயற்பட்டுள்ளது. ஆழ்கடல்  கப்பலின் சுழியோடி குழுவினர் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் கப்டனின் அறை, ஏனைய தங்குமிட அறையில் இருந்து சிதைந்த நிலையில் 14 சடலங்கள் மீட்டுள்ளனர்.

கப்பல் கவிழ்ந்து மூழ்கியதால் கடற் கொந்தளிப்பின் மத்தியில் கடலில்  சுகாதார அபாயங்கள் காரணமாக, மேலும் உடல்களை மீட்டெடுப்பது மிகவும் ஆபத்தான நிலையும் உள்ளது. இலங்கை கடற்படை சுழியோடிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மீட்பு பணிகள் இடம்பெறுகிறதென கடற்படை அறிவித்துள்ளது.

கப்பலில் பயணித்த 39 பேரில் - 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஐந்து பேர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments