டெல்லி பிளான்:முடிவில்லையென்கிறார் மாவை!

 


இந்தியாவின் டெல்லி பயணம் தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில் டெல்லி செல்லவுள்ளது என வெளியாகிய தகவல் தொடர்பிலேயே மாவை தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே டெல்லி விஜயம் அமையவுள்ளதாக கூறப்படுகின்றது. 

அரசியல் தீர்வு திட்ட விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம் என வலியுறுத்தி வரும் கூட்டமைப்பு, இதற்கு முன்னரும் டெல்லி செல்ல முற்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றன. எனினும் பயணம் பிற்போடப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது டெல்லி செல்வதற்குக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது எனத் தெரியவருகின்றது.

டெல்லி பயணத்தின்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது


No comments