கச்சதீவு காசில் கசமுசா!



 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கான செலவு விவரங்கள் தொடர்பில், யாழ் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் பதில் வழங்கப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு, கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஒரு மில்லியன் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டது. குறித்த நிதியில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு 10 இலட்சம் ரூபாவும், யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு 2 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட நிதியில்,யாழ்.மாவட்ட செயலகத்தின் செலவு  விபரங்கள் விரிவாகத் தரப்படாத நிலையில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் செலவு விவரங்களை, நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ளுமாறு, தகவல் கோரிக்கையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாவி்ல், ஆலய உற்சவத்திற்குத் தேவையான பொருட்கள், குடிநீர்த்தாங்கி மற்றும் தளபாடங்களை, மாவட்டச் செயலகம் மற்றும் ஊர்காவற்துறை, வேலணை பிரதேச செயலகங்களிலிருந்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றமை, ஆலயத் திருவிழா நிறைவு பெற்றதும் மீளவும் உரிய இடங்களுக்கு சேர்ப்பதற்கான எரிபொருட்செலவு, கச்சதீவுத் திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் செலவு உட்பட நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திற்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.

குறித்த நிதியில், உணவுப்பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், எரிபொருள், மின்பிறப்பாக்கி, சுத்திகரிப்பு பணியாளர்களின் சம்பளம், படகுக்கட்டணம், நீர்ப்பம்பிச் செலவுகள் என்பன உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில், கச்சதீவுத்திருவிழாவில் அதிகளவு இந்திய பக்தர்களும் கலந்து கொள்ளதனால், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் செலவினங்களில் சிலவற்றை மீளளிப்புச் செய்வதாக இந்திய துணைந்தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட செலவு விபரங்களின் நிதிக்கோரிக்கை விபரம், யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments