யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம்


யாழ்பாணத்தில் இருந்து 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயன் (வயது 46), அவரது மனைவி ரஜினி (வயது 45), மகள் தபெந்தினி (வயது 18) ஆகியோரே 

நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு மன்னார் பேசாலைக்கு வந்து அங்கிருந்து இரவு 8 மணியளவில் புறப்பட்டு நள்ளிரவு 02.00 மணிக்கு தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

அப்பகுதிக்கு ரோந்துசென்ற ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழு 3 பேரையும் மீட்டு , மண்டபம் கடலோர பாதுகாப்புகாவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

No comments