தீவுகளை விற்கவில்லை:டக்ளஸ்!



கிளிநொச்சி இரணைமடு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அண்மையில் சீன நாட்டவருக்கு காணி வழங்கப்படவுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அமைச்சர் டக்ளஸ், தேவானந்தா மறுதலித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் காணப்படும் தீவுகளில் நிர்வாகம் மற்றும் தீர்மானமெடுத்தல் யாருக்கு அமைய வேண்டும் என்பதிலே எனது எதிர்பார்ப்பு அமைந்துள்ளது . குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பெரிய தீவுக்கூட்டங்கள் இருப்பினும் அவை வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் காணப்படும் நூற்றுக்கணக்கான தீவுகளுக்காக அமைச்சரவைப் பத்திரம் கொண்டுவரப்பட்டது.

அபிவிருத்தி சபைகள் மூலம் அபிவிருத்தி முதலீடுகளை மட்டுமே மேற்காள்ள முடியும். எனவே அந்தந்த பகுதிக்குரிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்.

இரணைமடு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அண்மையில் சீன நாட்டவருக்கு காணி வழங்கப்படவுள்ளதாக நிலவும் கருத்துக்கள் பொய்யானவை.அத்தகைய கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் பினாமி அரசியலை நடத்துபவர்களாகவும் சூனிய அரசியலை நடாத்துபவர்களாகவும் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளின் உளறல் மட்டுமே எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவ்விடயம் தொடர்பில் எவ்வித உண்மைத் தன்மைகளும் இல்லை. அவர்கள் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாகக் காணப்படுவதையே வரலாறும் காட்டி நிற்கின்றது என்றும்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments