கோப்பாயில் வீட்டின் கதவை உடைத்து 16 பவுண் நகைகள் திருட்டு


யாழ்ப்பாணம் ,கோப்பாய் - கட்டப்பிராய் பகுதியில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் 

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

ஓய்வு பெற்ற ஆசிரியையான தான் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்ததாகவும் , மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது , வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த 16 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயவியல் மற்றும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments