யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் ரணிலின் மனைவி பங்கேற்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFZ2sHGReCmWY4cM-oTIFYt58jyeFN9eTFz10oRadQh3Pul_GtYt2zMYzyaYqpiePP4UEAYsxpPJqvC41cAenTC4B7_EbhFnp8u_D-QkBOZPnollRYWW5hL407tZZCYqYcS3mt25U-GboxCRpNU0oyo6LbjDZewWmWJ0R0A0Y-LL4Be7cSA1M_t_me-g/s16000/bnmnnm.jpg)
யாழ். பல்கலைக்கழக இன்றைய ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்.
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழுக்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குண ராஜா வரவேற்றுக்கொண்டார்.
புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் (Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் ( JUICE – 2022) தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறுகின்ற இந்த ஆய்வு மநாட்டின் முதன்மை உரையாளராக இலங்கையின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்கே கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றினார்.(க)
Post a Comment