சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு




இன்று வெள்ளிக்கிழமை காலை, இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்தபடியே ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இளவாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை.

இளவாலை காவல்துறையினர் குறித்த சடலத்தினை இனங்காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (க)

No comments