ஒண்டியிருக்க இடமின்றி நாடு நாடாக அலையும் கோத்தா?



இலங்கையில் இருந்து வெளியேறி மாலைதீவுக்குச் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்று  மாலை சிங்கப்பூர் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

SQ437 என்ற விமானம் மூலம் அவர் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கோட்டாபய ராஜபக்ச தற்போது மாலைதீவில் உள்ள ஒரு விருந்தகத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேசமயம், சிங்கப்பூரில் இருந்து அவர் அபுதாபி நோக்கிச் செல்ல உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

No comments