தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை!


பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலையை முன்வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments