அரச ஊழியர்களை சிறையில் அடைக்கவேண்டும்!



இலங்கை அரசை எதிர்த்து போராட்டம் முன்னெடுத்தால் அரச ஊழியர்கள் சிறைக்குச் செல்லவேண்டியவருமென எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும் என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கலாமே தவிர அதிகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டில் வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இப்போது சம்பளம் குறைக்க வேண்டுமே தவிர அதிகரிப்பு இல்லை. அதற்காகப் போராட்டம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். நமது நாட்டுக்கு இப்போது முக்கியமாகத் தேவைப்படுவது வெளிநாட்டு பங்களிப்பே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments