யாழில் மின்னல் தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை பலி!!


யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் அச்சுவேலி வடக்கை சொந்த இடமாகவும் உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட 41 வயதுடைய தியாகராஜா மதனபாதம் என்பவரே உயிரிழந்துள்ளார்.


வயலில் உழவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த  சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் இறப்பு தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் மற்றும் அப்பகுதி சுகாதாரப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments