கண்டுகொள்வதேயில்லை:திஸ்ஸ விதாரண!



வைரஸ் தொடர்பான விசேட நிபுணரான தன்னிடம் எந்தவிதமான ஆலோசனைகளும் கேட்கப்படுவதில்லை என்பதை தான் கவலையுடன் தெரிவிப்பதாக அரச பங்காளியான பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ{க்கான தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடர்பில் தன்னிடம் எந்தவிதமானக் கருத்துக்களையும் அரசாங்கத்தினர் கேட்கவில்லை என தெரிவித்த அவர் ,இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே, இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, தன்னுடன் ஒரு மணித்தியாலங்கள் கலந்துரையாடியதாகவும், இதன்போது மாத்திரமே  தடுப்பூசிகள் தொடர்பில் தன்னிடம் ஆலோசனைகளை அவர் கேட்டதாகவும்  கூறினார்.

இதனைத் தவிர்ந்த ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னிடம் ஆலோசனைகள் எதனையும் அரசாங்கம் கேட்கவில்லை. சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின்போது தான் வேடிக்கை பார்ப்பதாகவும் கவலையுடன் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.


No comments