பிரான்சு நாட்டின் மாவட்ட தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் வேட்பாளர்


எதிர்வரும் ஜூன் மாதம் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிரான்சு நாட்டில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல்  நடைபெறவுள்ளது.இம் முறை குறித்த இத் தேர்தலில்  பிரான்சு நாட்டில் Seine-Saint-Denis மாவட்டத்துக்கான வேட்ப்பாளர்களாக   bondy மற்றும் Pavillons-sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் முதன் முறையாக செல்வி  பிறேமி பிரபாகரன் என்ற இளம் தமிழ்ப் பெண்ணொருவர் இணை வேட்பளராக போட்டியிடுகிறார்.  

செல்வி பிறேமி பிரபாகரன் அவர்கள் 2020 நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பொண்டி bondy நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று bondy நகசபை உறுப்பினராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்தும் இம்முறை UDI ,Les Républicains, Libres ஆகிய கட்சிகளின் சார்பில் bondy மற்றும் pavillon -sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் இணை  வேட்பளராகப் போட்டியிடுகின்றார்.

Bondy நகரசபையில் கடந்த மார்ச் 27ஆம் திகதி அன்று தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bondy மற்றும் Pavillons-sous-Bois தமிழ் மக்கள் செல்வி பிறேமி பிரபாகரன் அவர்களுக்கு தங்களுடைய முழு ஆதரவையும் வழங்கி தேர்தலில் வெற்றி பெறச்செய்து பிரான்சு நாட்டில் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் தளத்துக்கு அடித்தளம் இடவேண்டும்.

No comments