முல்லைதீவில் மோதல்!



முல்லைத்தீவு- மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்துள்ளனர். அந்த நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெறுள்ளதென  தெரிவித்ததுடன்  சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

சாலை சிறுகடலில் இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் இறால் கூடு கட்டி இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் கட்டிய இறால் கூட்டில் இறால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் சாலை சிறுகடலுக்கு நேற்றிரவு சென்று அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து   மாத்தளன் பகுதியைச் சேர்ந்தவர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

வாள்,கம்பி,கத்தி போன்றன கொண்டு இரணைப்பாலையைச் சேர்ந்த மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன் போது இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் மூவரும் ம்,மாத்தளன் பகுதியனை சேர்ந்த மீனவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


No comments