முல்லைத்தீவிலும் வாள்வெட்டுக் கும்பலால் தாக்குதல்

முல்லைத்தீவு  மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகழேந்திநகர் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி  இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது இரண்டு மோட்டார்

சைக்கிள்களில் வந்த நான்கு பேரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்த இளம் குடும்பஸ்தர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்றைய தினம் (26-03-2021) இரவு  குறித்த வீட்டுக்குச் சென்ற  தாக்குதல் தாரிகள் வீட்டின் கதவுகளை உடைத்து  சேதப்படுத்தியுள்ளனர்.

இதேநேரம் வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments