இயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்


தளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா  அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று இயற்கை எய்தினார்

போராளிகள் தங்களின் உயிர்களைவிட பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கபட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த சம்பவம் கட்டியம் கூறி நிர்கிறது. 

தளபதி கிட்டு பயணித்த கப்பல் சர்வதேசக் கடலில் இந்தியக் கடற்ப்படையினரால் மடக்கப்பட்ட போது, சரண்டைவதில்லை என்ற கோட்ப்பாட்டில் கப்பலை வெடிக்க வைத்து தளபதி கிட்டு உட்பட போராளிகள் வீர காவியமானார்கள்!

இதன் போது தாம் தாயகம் நோக்கிப் பயணித்த MV அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா பொது மகன், அவரை காத்துக் கொள்ள தளபதி கிட்டு கடலில் குதித்து நீந்து மாறு பணித்தார். 

கப்டன் கடலில் குதித்து நீதிச் செல்ல கப்பல் வெடித்துச் சிதறியது, கப்டன் இந்தியப் படைகளிடம் கைதாகி சிறைவாசம் அனுபவித்து, விடுதலையாகி வல்வைட்டித்துறையில் வாழ்ந்து வந்த நிலையில், இன்று இயற்கை எய்தினார்.

No comments