30,152 தொற்றுக்கள், 251 உயிரிழப்புக்களுடன் தமிழகத்தில் கொரோன வீரியமடைகிறது.

தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,76, 695 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இன்று 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 16,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 


No comments