காவல்துறை முடக்கம்: அதிரடிப்படை களத்தில்!


பாதாள உலக கோஸ்டியை கட்டுப்படுத்துவதென்ற பேரில் இன்று முதல் இலங்கை முழுவதும் விசேட அதிரடிப்படை களத்தில் இறங்குகின்றது.
பதில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் நேற்று நடந்த முக்கிய சந்திப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது பாதாள உலக கோஸ்டியை ஒழிக்கும் செயற்றிட்டத்தை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மாளிகாவத்தை மற்றும் மொரட்டுவ பகுதிகளில் பாதாள உலக கோஸ்டியினர் சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இவர்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் இதற்கான பெறுபேறுகளை பார்க்கலாம் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments