மக்கள் தீர்ப்பும் வெல்லும் :டக்ளஸ்




அடிப்படையில் ஒன்றை ஒழித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர் இன்று தயாரில்லை. இந்த ஆழ்மன அச்சத்தில் இருப்பவர்கள் நீதியின் தீர்ப்பு வேறு விதமாக அமையும் என்று நம்பியிருந்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றம் நியாத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments