காற்று தூக்கி வீசியதில் முதியவர் பலி!

பலத்த காற்று வீசியதால் உந்துருளியின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த முதியவர் ஒருவர் காற்று தூக்கி வீசியதால் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த 80 வயதுடைய சந்திரசேகர் சரவணமுத்து என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மகனுடன் எழுதுமட்டுவால் பகுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது கோப்பாய் பாலத்தடியில் காற்று தூக்கி வீசியதால் முதியவர் அருகில் இருந்த கம்பத்துடன் அடிபட்டு விழுந்தார்.

தலையில் பலத்த அடிகாயத்துடன் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments