வீடு புகுந்த வாள் வீச்சு! ஐவர் மருத்துவமனையில்!


வவுனியாவில் வீடு புகுந்து நடத்திய வாள் வெட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும்காவு வண்டி மூலம் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மகாறம்பைக்குளப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிவிட்டு, வீட்டில் தரித்து நின்ற உந்துருளியையும் அடித்து நொருக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனார்.

காயமடைந்த ஐந்து போில் இருவர் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணைகளை நத்திய காவல்துறையினர், முதற்கட்டமாக இருவரை சந்தேசகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.


No comments