வீதியில் வீசப்பட்ட சிசு சடலமாக மீட்பு!

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சிசு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05) முன்னெடுக்கப்பட்டது.

சடலம் முழுமையாக சிதைவடைந்து இருந்ததால் குழந்தையின் உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது. குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸார் ஊடாக சடலம் நுவரெலியா வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments