தமிழரசு உள்ளே:டக்ளஸ் வெளியே?


கொரோனோ விவகாரத்தில் வடக்கு அல்லாடிவருகின்ற நிலையில் சுமந்திரன் முதல் கூட்டமைப்பு தலைகள் பலவும்
பதுங்கிக்கொண்டன.இன்னும் சில தரப்புக்கள் கட்சி பத்திரிகையில் செய்திகளை வரச்செய்வதுடன் ஓய்வுபெற்றுள்ளன.

ஆயினும் உள்ளுராட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் தமது தனிப்பட்ட முயற்சியாக மக்களிற்கு சிறிய சிறிய உதவிகளை வழங்க தவறவில்லை.

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் சந்திப்பு வைத்தியசாலை விஜயமென பரபரப்பு காட்டிவரும் டக்ளஸ் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைந்தளவேனும் நிவர்த்திசெய்து கொள்வதற்கான முன்னேற்பாடாக சமுர்த்தி பெறும் பயனாளிகளுக்கு முன்னேற்பாடாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன் குறித்த கொடுப்பனவை கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பின்னர் அதை அவர்களிடமிருந்து மீளப் பெறுவதா? அல்லது நிவாரணமாக வழங்குவதா என்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மறுபுறம் தமிழரசு தரப்புக்கள் மாவை சேனாதிராசா மகிந்தவுடன் பேசி பிரதேச செயலக ரீதியாக ஒரு மில்லியனை பெற்று கொடுத்திருப்பதாக செய்திகளை பரப்பி வருகின்றன.

No comments