கொரோனாவுக்கு ஆறாயிரம் பேர் பலி?

சீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது இத்தாலியில் உச்சம் தொட்டு உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று (16) காலை வரை 47 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) 6,518 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 76 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக 84,294 பேர் குணமடைந்துள்ளனர்.

இப்போது வரையில் கொரோனா தாக்கம் மற்றும் மரண விகிதத்தை விட குணமடையும் விகிதம் அதிகமாகவே காணப்படுகின்றது.

சீனாவில் மரணம் நிகழும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் இத்தாலியில் மரணம் நிகழ்தல் அதிகரித்து காணப்படுகின்றது.

இதன்படி,

- சீனா – 3,213
- இத்தாலி – 1,809
- ஈரான் – 724
- ஸ்பைன் – 292
- பிரான்ஸ் - 127
- தென் கொரியா – 75
- அமெரிக்கா – 69
- பிரித்தானியா - 35
- ஜப்பான் – 24
- நெதர்லாந்து - 20
- சுவிஸ் - 14
- ஜேர்மன் – 13
- பிலிப்பைன்ஸ் - 12
- ஈராக் - 10
- டைமன்ட் இளவரசி (கப்பல்) – 7
- சன் மரினோ - 7
- இந்தோநேசியா - 5
- அவுஸ்திரேலியா - 5
- ஹொங் கொங் - 4
- அல்ஜீரியா - 4
- கிரீஷ் - 4
- பெல்ஜியம் - 4
- லெபனான் - 3
- சுவிடன் - 3
- நோர்வே - 3
- போலந்து - 3
- இந்தியா - 2
- எகிப்த் - 2
- ஆஜென்டீனா - 2
- டென்மார்க் - 2
- அயர்லாந்து - 2
- பல்கிரிஜா - 2
- ஈகுவாடோர் - 2
- சூடான், கஜனா, உக்ரைன், மொரோக்கோ, அஜார்பஜான், பனாமா, அல்பானியா, லக்செம்போர்க், தாய்வான், தாய்லாந்து, கனடா, அவுஸ்திரியா, ஹங்கேரி, சிலுவேனியா, கவுதமாலா - 1

மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதேவேளை 156 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) இப்போது வரை 85,318 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments