சக்கரநாட்காலி பயணம் நிறைவுற்றது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலிப் பயணம் நேற்று (18) முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த சக்கர நாற்காலிப் பயணமானது இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று நேற்று வவுனியாவில் முற்றுப்பெற்றது.

இந்நிலையில் வவுனியா பொது அமைப்புகளால் அவர்ளுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மொஹமட்அலி மற்றும் ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்திர (தவிர்க்க முடியாத காரணத்தால் இடைவழியில் பயணத்தை முடித்து கொண்டவர்) ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை வலியுறுத்தி இலங்கை முழுதுமான சுற்றுப் பயணத்தை சக்கர நாற்காலி மூலம் மேற்கொண்டிருந்தனர்.

"சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் மாற்றுத்திறனாளிகளும் அனுபவிக்க வழியமைக்க வேண்டும் என்பதுடன் நாட்டிலுள்ள சகல மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்பதுடன் பல்வேறு கோரிக்கைகளுடன் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டது".

யாழில் ஆரம்பித்த குறித்த பயணம் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்துடன் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று வவுனியாவில் தமது பயணத்தை முடித்துகொண்ட அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வாடிவீட்டில் இடம்பெற்றது. இதன்போது பயணத்தை மேற்கொண்ட இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

No comments