பிணை முறி குறித்த விசாரணை அர்த்தமற்றது

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (03) சோசலிச மக்கள் முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

பிணைமுறி மோசடியில் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதும் அது தொடர்பாக தற்போதைய நிலை என்னவென யாருக்கும் தெரியாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியின் முன்னேற்றம் தொடர்பாக மாதாந்தம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இதனை பேசிக்கொண்டிருக்க முடியாது - என்றார்.

No comments