அமைக்கப்பட்டது திருக்கேதிஸ்வரம் வளைவு
மன்னார் - திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவானது கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் நேற்று (19) காலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று உடைத்து அகற்றப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரனை இடம்பெற்று வந்தது.
இதேவேளை திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஷ்டிப்பதற்காக ஏற்கனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு நீதி மன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரியிருந்தனர்.
அதற்கமைவாக மன்னார் மேல் நிதிமன்றத்தால் நேற்று (19)ம் திகதியிலிருந்து எதிர்வரும் (23)ம் திகதி வரையான 5 நாட்களுக்கு வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று உடைத்து அகற்றப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரனை இடம்பெற்று வந்தது.
இதேவேளை திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஷ்டிப்பதற்காக ஏற்கனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு நீதி மன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரியிருந்தனர்.
அதற்கமைவாக மன்னார் மேல் நிதிமன்றத்தால் நேற்று (19)ம் திகதியிலிருந்து எதிர்வரும் (23)ம் திகதி வரையான 5 நாட்களுக்கு வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Post a Comment