தந்தை மீது மரியாதை இருந்தால் சேறு பூசாதீர்கள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர் என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் த.செல்வராணி தெரிவித்தார்.

அம்பாறை – கல்முனை வாடி வீட்டு பகுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் த.செல்வராணியின் தலைமையில் நேற்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும்,

தற்போதைய ஆட்சியில் கூட பெண்களாகிய எங்களுக்கு சுதந்திரமில்லை. இன்று எமது கணவன்மார்களையும் உறவுகளையும் தொலைத்து 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை. பெண்களாகிய எங்ளுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கின்றதோ எமது உறவுகள் என்று வருகின்றார்களோ அல்லது நியாயமான தீர்வு எப்போது கிடைக்கின்றதோ அன்றுதான் எமக்கு சுதந்திரம்.

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை ஐ.நா எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் உயிருடன் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு உயிருடன் இல்லை என்றால் நாங்கள் உயிருடன் ஒப்படைத்த உறவுகள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று எம்மீதும் பல போலியான குற்றம் சுமத்தி ஊடகங்களுக்கு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை குழப்புவதற்காக பல்வேறுபட்ட அரசியல் சக்திகள் இன்று தேர்தலை முன்னிறுத்தி களம் இறங்கியிருக்கின்றன. தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் தயவுசெய்து எங்களது போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள் உங்களது தந்தையை நீங்கள் மதிப்பவர் என்றால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்று போராட்டத்தில் ஈடுபடும் போலியானவர்களைக் கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள்.

எமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 10 வருடங்களாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் இந்த போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற ஒரு சிலரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நியமித்திருக்கிறார்கள் அவர்களது பின்னணியை பார்த்திருந்தால் அவர்கள் யாருமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல.

போராட்ட காலத்தில் கணவனை இழந்த அல்லது உறவுகளை இழந்த இறந்தவர்கள் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் கணவனை வீட்டைவிட்டு விரட்டியவர்களை கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பது உகந்ததல்ல இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 5 கிலோ அரிசிக்கும் மாவிக்கும் பின் நிற்பவர்கள் அல்ல நாங்கள் எம்மோடு போராட்டத்தை நடத்துபவர்கள் தங்களது பிள்ளைகள் தங்களது உறவுகள் தங்களோடு வந்து வரவேண்டுமென்று போராடுபவர்கள் என சுட்டிக்காட்டினார்.

No comments