இந்த அரசு இயலாமல் தள்ளாடுகிறது

இந்த அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். மேலும்,

தற்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பொது மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. மைத்திரிபால சிறிசேனவை போன்று கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக மாறியிருந்தாலும் கொள்கைகள் அப்படியே இருக்கின்றது. பொருளாதாரத்தில் சிறப்பான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த அரசாங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவில்லை.

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்று தற்போது 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அதன் இயலாமையை மக்களுக்கு காட்டியுள்ளது - என்றார்.

No comments